அவளும் பெண்தானே!

நினைவெல்லாம் நீ என்றாய் !

நித்தம் நீயே என்றாய்!

நாளை நான் உனதென்றாள்!

நிஜங்கள் மறந்தேன் என்றாள்!

நேற்றைய கனவிலும் நீயே என்றாள்!

நெற்றி உனக்கே என்றாள்! 

நேசம் நிஜங்கள் என்றாள்!

நாமே நிரந்தரம் என்றாள்!

இப்போதோ,
நினைக்கக் கூட நேரமில்லை பாவம் அவளுக்கு!
அவள் கணவன் ! அவள் குழந்தை...

அவளும் பெண்தானே!